அமெரிக்க டாலரின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடையும் என மதுரையில் நடந்த கருத்தரங்கில் பொருளாதார வல்லுனர்கள் பேசினர்.
டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு என்னும் தலைப்பில் நடந்த கருத்தரங்கில் பொருளாதார வல்லுனர் வெங்கடேஷ் பேசியதாவது: டாலரின் வீழ்ச்சி அமெரிக்க பொருளாதாரத்தின் அஸ்திரத்தை நிலைகுலைய செய்துள்ளது. ரூ.45ல் இருந்த அதன் மதிப்பு ரூ.39 என்ற அளவிற்கு வந்துள்ளது. இந்த சரிவு இன்னும் அதிகரிக்கும். இதனால் பங்குசந்தை, ரியல் எஸ்டேட் போன்ற தொழில்கள் இந்த ஆண்டில் வீழ்ச்சியடையும். இதன் தாக்கம் உலக நாடுகள் அனைத்தையும் பாதிக்கும். இதனால் வெளிநாடுகளில் பலர் வேலைகளை இழக்கும் நிலை ஏற்படும். இந்தியாவில் இருந்து பொருட்களை ஏற்றுமதி செய்வதால் அதிக லாபம் பெறமுடியாத நிலை உருவாகும். டாலர் வீழ்ச்சியால் தங்கம், வெள்ளி போன்ற மெட்டல் பொருட்களின் விலை மட்டும் அதிகரிக்கும். இதன் பாதிப்புகள் ஏற்படாதவாறு மத்திய அரசு 2 ஆண்டிற்குள் புதிய கொள்கைகளை வகுக்க வேண்டும். தொழில் அதிபர்களும் வெளிநாடுகளில் பொருட்களை ஏற்றுமதி செய்வதை விட்டு உள்நாட்டு சந்தைகளை நம்பி வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மடீட்சியா தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலர் சீத்தாராமன், இணை செயலர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
நன்றி : தினமலர் வர்த்தகம்
Sunday, January 20, 2008
டாலர் மதிப்பு மேலும் வீழ்ச்சி: மதுரை கருத்தரங்கில் தகவல்
Posted by புல்லிஷ் தமிழன் ( BULLISH TAMILAN) at 12:50 PM
Labels: டாலரின் வீழ்ச்சி, டாலர்
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
я вот что скажу: бесподобно... а82ч
Post a Comment