Sunday, January 20, 2008

டாடா கார் மட்டுமில்லே மம்தா ஓவியமும் ரூ.1 லட்சம்

டாடா கார் தயாரிப்பு நிறுவனம் அறிமுகம் செய்த 'நானோ' காரின் விலை ரூ. ஒரு லட்சம் என்று எல்லாருக்கும் தெரியும்; டாடாவை எதிர்த்து போராடிய திரிணமுல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜியின் ஓவியத்தின் விலையும் ரூ ஒரு லட்சம் தான்.

பார்ப்பதற்கு அமைதியானவர் மம்தா; மேடையேறி விட்டால் புலியாக பாய்ந்து, சிங்கமாக கர்ஜிப்பார். அதுபோல, அவர் உடுத்தும் புடவை, 'பளீச்' என்று எப்போதும் இருக்காது; ஆனால், அவர் உள்ளம் எந்த அளவுக்கு பிரகாசமானது என்பதை அவர் ஓவியங்கள் காட்டும். அவர் ஒரு அரசியல்வாதி என்று தான் பலருக்கு தெரியும்; சிறந்த ஓவியர் என்று தெரிந்தவர் வெகு சிலரே. சமீபத்தில் அவர் இரண்டாவது முறையாக, தன் ஓவியக்கண்காட்சியை , கோல்கட்டாவில் நடத்தினார்; அவர் வரைந்த 45 ஓவியங்கள், காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன. இந்த ஓவியங்களின் ஒவ்வொன்றும் ரூ. ஒரு லட்சத் திற்கு விற்கப்பட்டன.

இதுகுறித்து மம்தா கூறுகையில்,'நான் பயிற்சி பெற்ற ஓவியர் அல்ல; ஏதோ மனதுக்கு பிடித்ததை தீட்டுவேன். எனக்கு இரவில் தான் நேரம் கிடைக்கிறது. 'கேன்வாஸ்' துணியை வைத்து கிறுக்க ஆரம்பித்தேன். இதுவே எனக்கு சிறந்த பொழுதுபோக்காக மாறியது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ளேன்' என்றார்.

நன்றி : தினமலர் வர்த்தகம்

0 comments: